×

சீனாவில் 2 நிலக்கரி சுரங்கங்களில் ஏற்பட்ட விபத்தில் 12 பேர் பலி

பெய்ஜிங்: சீனாவில் 24 மணி நேரத்தில் இரண்டு தனித்தனி நிலக்கரி சுரங்க விபத்துகளில் 12 பேர் பலியாகியுள்ளனர். ஷாங்சி மாகாணத்தின் சோங்யாங் கவுண்டியில் உள்ள ஒரு நிறுவனத்திற்குச் சொந்தமான நிலக்கரி பதுங்கு குழி திங்கள்கிழமை நள்ளிரவுக்கு முன்னதாக இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேரை மீட்புபடையினர் தேடிவருகின்றனர்.

தொடர்ந்து சீனாவின் கிழக்கு அன்ஹுய் மாகாணத்தில் உள்ள ஹுவாய்ஹே எனர்ஜியின் நிலக்கரிச் சுரங்கத்தில் எரிவாயு வெடித்ததில் 7 பேர் பலியாகினர். மேலும் 2 பேர் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை. விபத்துகளைத் தடுப்பதற்காக சுரங்கங்கள் அதிக உற்பத்தியைக் கட்டுப்படுத்தும்படி சுரங்கங்களுக்கு, சுரங்கப் பாதுகாப்புக் கட்டுப்பாட்டாளர் கடந்த மாதம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இதனை தொடர்ந்து ஷாங்க்சியில் இந்த அபாயகரமான விபத்து நிகழ்ந்துள்ளது.

The post சீனாவில் 2 நிலக்கரி சுரங்கங்களில் ஏற்பட்ட விபத்தில் 12 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : China ,BEIJING ,Songyang County, Shangxi Province ,Dinakaran ,
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...