×

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்தில் சிக்கியது

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் பாலைவனப் பகுதியில் இந்திய விமானப்படை விமானம் சற்று நேரத்திற்கு முன்பு விபத்துக்குள்ளானது. குறிப்பாக, இலகுரக போர் விமானம் (எல்சிஏ) தேஜாஸ் இன்று செயல்பாட்டு பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக, விமானி பத்திரமாக விமானத்தில் இருந்து வெளியேறினார்.

இச்சம்பவம் குறித்து இந்திய விமானப்படை தெரிவித்துள்ளதாவது; “இந்திய விமானப்படையின் தேஜாஸ் விமானம் ஒன்று இன்று ஜெய்சால்மரில் செயல்பாட்டு பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது. விமானி பத்திரமாக வெளியேறினார். விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கடந்த மாதம் மேற்கு வங்கத்தில் பயிற்சியின் போது இந்திய விமானப்படையின் ஹாக் பயிற்சி விமானம் கலைகுண்டா விமானப்படை நிலையம் அருகே பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் அந்த விபத்தில் உயிர் சேதமோ, பொதுமக்களின் சொத்துக்களுக்கு சேதமோ ஏற்படவில்லை. விமானிகள் இருவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

The post ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்தில் சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Indian Air Force ,Jaisalmar, Rajasthan ,Jaipur ,Jaisalmer ,Rajasthan ,Jaisalmer, Rajasthan ,
× RELATED ராஜஸ்தான் அருகே இந்திய...