×

2024 ஐபிஎல் தொடர் முதல் 2 போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் ஆப்சென்ட்: மாற்று வீரரை தேடும் ஹர்திக்

மும்பை : 2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியா கேப்டன்சியில் புதிய அத்தியாயத்தை தொடங்க உள்ளது. இந்நிலையில் சூர்யகுமார் யாதவால் அணியின் பேட்டிங் வரிசையில் சிக்கல் எழுந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டியின் போது சூர்யகுமார் யாதவ் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதன் பின் அவருக்கு குடலிறக்கம் காரணமாக அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு பின் அவர் உடற்தகுதியை மேம்படுத்தும் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். ஐபிஎல் தொடருக்கு முன்னதாக அவர் தயாராகி விடுவார் என கூறப்பட்ட நிலையில், தற்போது சூர்யகுமார் யாதவ் போட்டிகளில் பங்கேற்க மேலும் சில நாட்கள் ஆகலாம் என கூறப்படுகிறது. தற்போது அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியின் கண்காணிப்பில் இருக்கிறார்.

இந்நிலையில் உடல்நிலை குறித்து தகவல்களின் அடிப்படையில் சூர்யகுமார் யாதவ் ஏப்ரல் மாத துவக்கத்தில் தான் போட்டிகளில் விளையாட முழு உடற்தகுதி பெற முடியும். மும்பை இந்தியன்ஸ் அணி மார்ச் 24 மற்றும் 27 ஆகிய தேதிகளில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு எதிரான லீக் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. அந்த 2 போட்டிகளிலும் சூர்யகுமார் யாதவ் பங்கேற்க முடியாத நிலையில் இருக்கிறார். இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பலத்த அடியாகும். சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக வேறு இந்திய வீரரை தேர்வு செய்து அணியின் பேட்டிங் வரிசையை சம நிலைக்கு கொண்டு வர வேண்டிய கட்டாயத்தில் கேப்டன் கேப்டன் ஹர்திக் பாண்டியா இருக்கிறார்.

The post 2024 ஐபிஎல் தொடர் முதல் 2 போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் ஆப்சென்ட்: மாற்று வீரரை தேடும் ஹர்திக் appeared first on Dinakaran.

Tags : Suryakumar Yadav ,IPL 2024 ,Hardik ,MUMBAI ,2024 IPL ,Mumbai Indians ,Hardik Pandya ,South Africa ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் 2024: லக்னோ அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி