×

க.பரமத்தி அருகே விபத்து: டூவீலர்கள் மோதல் விவசாயி பலி

 

க.பரமத்தி,மார்ச்12: க.பரமத்தி அருகே இரு சக்கர வாகனம் மீது மற்றொரு இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் விவசாயி பலியானார். கரூர் அருகே காதப்பாறை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் வேலுச்சாமி(40). கிராம நிர்வாக அலுவலரான இவர் பணி நிமித்தமாக கரூர் கோவை தேசிய நெடுஞ்சாலையில் க.பரமத்தி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.இதே போல கரூர் மாவட்டம் தும்பிவாடி அருகே சேங்கலாபுரம் பகுதியை சேர்ந்தவர் சோளியப்பன் மகன் ராஜாமணி(59) விவசாயி. இவரது மனைவி செல்வராணி(51) ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் ஊரில் இருந்து புறப்பட்டு கரூர் கோவை தேசிய நெடுஞ்சாலையில் க.பரமத்தி நோக்கி வந்துள்ளனர்.

சூரியம்பாளையம் பிரிவு அருகே சென்றபோது முன்னால் சென்ற இரு சக்கர வாகனம் மீது எதிர்பாராதவிதமாக இரு சக்கர வாகனம் மோதியது. இதில் தம்பதியினருக்கு படுகாயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் தம்பதியினரை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு விவசாயியை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். மற்றொருவர் சிகிச்சைகாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து க.பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post க.பரமத்தி அருகே விபத்து: டூவீலர்கள் மோதல் விவசாயி பலி appeared first on Dinakaran.

Tags : Paramathi ,Subramani ,Veluchami ,Kathappara ,Karur ,Dinakaran ,
× RELATED க.பரமத்தி அருகே மது பாட்டில் பதுக்கிய பெண் உள்பட 2 பேர் கைது