×

விவசாயிகளுக்கு ₹1.45 கோடி மதிப்பில் வட்டியில்லா கடன்

 

நாமகிரிப்பேட்டை, மார்ச் 12: நாமகிரிப்பேட்டை ஒன்றிய விவசாயிகளுக்கு ₹1.45 கோடி மதிப்பில் வட்டியில்லா கடனை, அமைச்சர் மற்றும் எம்பி வழங்கினர். நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட மங்களபுரம், நாரைகிணறு மற்றும் மத்துரூட்டு ஆகிய கிராமங்களில் வசித்து வரும் விவசாயிகளுக்கு, பட்டா இல்லாததால் அரசின் சலுகைகள் மற்றும் திட்டங்களை பெற முடியாமலும், பயிர்க்கடன் பெற முடியாமலும் இருந்தனர். இந்நிலையில், வருவாய்துறை அமைச்சர், நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில், தகுதியுள்ள விவசாயிகளுக்கு உடனடியாக பட்டா வழங்கப்படும் என அறிவித்தார். இதனையடுத்து, கடந்த மாதம் விண்ணப்பித்த அனைத்து விவசாயிகளுக்கும் பட்டாக்கள் வழங்கப்பட்டது.

அவர்களுக்கு உடனடியாக கூட்டுறவு கடன் சங்கம் மூலம், வட்டியில்லா கடன் வழங்கப்படும் என, கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்பி கூறினார். அதேபோல, நேற்று 90 விவசாயிகளுக்கு சுமார் ₹1.45 கோடி மதிப்பீட்டில் வட்டியில்லா கடன் வழங்கப்பட்டது. இதில் அமைச்சர் மதிவேந்தன், ராஜேஷ்குமார் எம்பி ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், நாமகிரிப்பேட்டை ஒன்றிய திமுக செயலாளர் ராமசுவாமி, அவைத்தலைவர் கருப்பண்ணன் மற்றும் தன்ராஜ், அருள், ஜோதிலட்சுமி, பேபி, ராஜராஜேஸ்வரி, ரமேஷ்குமார், ஜெகதீசன், இளையப்பன், கேசவன் மற்றும் சேகர், மணி, அன்பு, முருகப்பன், சரவணன், கோபி, அருண், வசந்தகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post விவசாயிகளுக்கு ₹1.45 கோடி மதிப்பில் வட்டியில்லா கடன் appeared first on Dinakaran.

Tags : Namakrippet ,Namakrippet union ,Mangalapuram ,Naraikinaru ,Mathuruttu ,Dinakaran ,
× RELATED சாலையில் பெருக்கெடுத்து ஓடிய 1.5 லட்சம் முட்டைகள்