×

சிவகாசி அருகே விஸ்வநத்தம் ஊராட்சியில் ரூ.12 லட்சத்தில் புதிய சுகாதார வளாகம் திறப்பு

சிவகாசி, மார்ச் 12: சிவகாசி அருகே விஸ்வநத்தம் ஊராட்சியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதிய சுகாதார வளாகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நேற்று திறந்து விடப்பட்டது. சிவகாசி ஒன்றியம், விஸ்வநத்தம் ஊராட்சியில் விஸ்வநத்தம் புதூரில் புதிய சுகாதார வளாகம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் நாகராஜிடம் தொடர்ந்து வலியுறுத்தினர்.

அதனை தொடர்ந்து ஊராட்சி பொது நிதி மற்றும் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.12லட்சம் மதிப்பீட்டில் புதிய சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த புதிய சுகாதார வளாகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்சிக்கு விஸ்வநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல்நாகராஜ் தலைமை வகித்தார்.

ஊராட்சி ஒன்றிய தலைவர் முத்துலட்சுமிவிவேகன்ராஜ் கலந்து கொண்டு சுகாதார வளாகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்சியில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் நாகேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் கணேசன், வார்டு உறுப்பினர்கள் கருப்பசாமி, உமா மகேஸ்வரி ஆறுமுகம், ஊராட்சி செயலர் ஹரிபாஸ்கரன் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஊராட்சி நிர்வாகம் செய்திருந்தது.

The post சிவகாசி அருகே விஸ்வநத்தம் ஊராட்சியில் ரூ.12 லட்சத்தில் புதிய சுகாதார வளாகம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Viswanantham panchayat ,Sivakasi ,Viswanatham panchayat ,Sivakasi Union ,Viswanatham Pudur ,
× RELATED குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை