×

கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்களுக்கு விருதுகள்: கலெக்டர் வழங்கினார்

 

திருவள்ளூர்: தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் கலைத் துறையில் சாதனைப் படைத்த கலைஞர்களுக்கு மாவட்ட அளவிலான கலை விருது வழங்கும் விழா மற்றும் இளம் கலைஞர்களுக்கான மாவட்ட அளவிலான கலைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு வழங்கும் விழா ஆகியவை திருவள்ளூர், மாவட்ட கலெக்டர் வளாக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் த.பிரபு சங்கர் விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கினார்.

கலைத்துறையில் சாதனைப்படைத்த கலைஞர்களை மாவட்ட அளவில் தேர்வு செய்து விருது வழங்கப்படுகிறது. மாவட்ட கலெக்டர் தலைமையில் செயல்படும் மாவட்டக் கலை மன்றம் வாயிலாக திருவள்ளூர் மாவட்டத்தில் 2022-2023 மற்றும் 2023-2024ம் ஆண்டுக்களுக்கான 30 விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

66 வயதுக்கு மேற்பட்ட கலைஞர்களுக்கான கலைமுதுமணி விருதினை நாடகம் கலைஞர் டி.கே.தீனதயாளன், தெருக்கூத்துக் கலைஞர் எ.ஏகாம்பரம், சிலம்பாட்டக் கலைஞர் சு.நடராஜன், ஆர்மோனியக் கலைஞர் ரா.லோகநாதன், பாடகர் வ.மதிவாணன், நாதஸ்வரக் கலைஞர் கே.என்.அமரேசன் ஆகியோருக்கும், 51 வயது முதல் 65 வயதுக்குட்பட்டவர்களுக்கான கலை நன்மணி விருதினை தவில் கலைஞர் மு.வெங்கடேசன், மேடை நாடகக் கலைஞர் ஏ.சுப்பிரமணி, மிருதங்கக் கலைஞர் செ.எட்டியப்பன், தெருக்கூத்து கலைஞர் க.மாதவன், ஓவியக் கலைஞர் எல்.சி.நாராயணன், நாதஸ்வரக் கலைஞர் க.ரவி ஆகியோருக்கும் வழங்கினார்.

36 வயது முதல் 50 வயதுக்குட்பட்டவர்களுக்கான கலைச்சுடர்மணி விருதினை தெருக்கூத்து கலைஞர் கி.சபரிமலை, தப்பாட்டக் கலைஞர் கா.வெங்கடேசன், சிலம்பாட்டக் கலைஞர் மா.தமிழ்செல்வி, கிராமியக் கலைஞர் ரு.வரலட்சுமி, சிலம்பாட்டக் கலைஞர் ல.சுந்தர்ராஜ், தெருக்கூத்து கலைஞர் ஜெ.சோமசுந்தரம் ஆகியோருக்கும், 19 வயது முதல் 35 வயதுக்குட்பட்டோருக்கான கலை வளர்மணி விருதினை தெருக்கூத்து கலைஞர் சே.சீனிவாசன், நாதஸ்வரக் கலைஞர் கோ.வினோத்குமார், தெருக்கூத்து கலைஞர் லோ.ஐயப்பன்,

சிலம்பாட்டக் கலைஞர் ச.பிரபாகரன், சிற்பக் கலைஞர் ம.ஹரிகிருஷ்ணன், குரலிசைக் கலைஞர் தி.சாருகேசி ஆகியோருக்கும் வழங்கினார். 18 வயதுக்குட்பட்டோருக்கான கலை இளமணி விருது சிலம்பாட்டம் பி.நான்சி எஸ்தர், பரதநாட்டியம் கு.சன்ஸ்கிருதி, நாதஸ்வரம் ச.லோகேஷ், மிருதங்கம் நா.தினேஷ், தப்பாட்டம் ர.மோனிஷா, பரதநாட்டியம் யு.வைஷ்ணவி ஆகியோருக்கும் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் விருதுகள் வழங்கினார்.

The post கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்களுக்கு விருதுகள்: கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Tamil Nadu Government Department of Arts and Culture ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள...