×

சசி தரூர் பேட்டி: மும்முனை போட்டியில் நான் வெற்றி பெறுவது உறுதி

திருவனந்தபுரம்: கேரளாவில் திருவனந்தபுரம் நாடாளுமன்றத் தொகுதி ஒரு நட்சத்திர தொகுதியாக கருதப்படுகிறது. தொடர்ந்து மூன்று முறை இங்கு போட்டியிட்டு ஹாட்ரிக் வெற்றி பெற்ற சசி தரூர் மீண்டும் போட்டியிடுவது தான் இதற்கு முக்கிய காரணமாகும். தங்களிடமிருந்து பறிபோன இந்தத் தொகுதியை மீண்டும் கைப்பற்றுவதற்காக இடது சாரி கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், இதே தொகுதியின் முன்னாள் எம்பியுமான பன்யன் ரவீந்திரன் களமிறக்கப்பட்டுள்ளார்.

கடந்த இருமுறையும் இந்தத் தொகுதியில் இரண்டாவது இடத்தைப் பிடித்த பாஜ, ஒன்றிய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகரை பாஜ நிறுத்தியுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர் கூறியது: என்னை எதிர்த்து போட்டியிடும் இரு வேட்பாளர்களையும் நான் சாதாரணமாக கருதவில்லை. ஆனாலும் ஹாட்ரிக் வெற்றி பெற்ற எனக்கு இந்தத்தொகுதியில் நான்காவது முறையாக மீண்டும் வெற்றி கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post சசி தரூர் பேட்டி: மும்முனை போட்டியில் நான் வெற்றி பெறுவது உறுதி appeared first on Dinakaran.

Tags : Sasi Tharoor ,Thiruvananthapuram ,Kerala ,Shashi Tharoor ,
× RELATED சசி தரூருக்கு தேர்தல் ஆணையம்...