×

இருசக்கர வாகனங்கள் திருட்டு: 3 போலீசார் பணியிடை நீக்கம்

 

சென்னை: விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் இருசக்கர வாகனங்களை திருடிய 3 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நிலை எழுத்தர் ஜெகன், சத்திய பிரபு, மணி ஆகிய மூன்று காவலர்கள் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை திருடியுள்ளனர். இருசக்கர வாகனங்களை திருடி, மெக்கானிக் ஷெட்டில் மறைத்து வைத்த காரணத்திற்காக பணியிடை நீக்கம் செய்து கோயம்பேடு காவல் துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 4 விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்கள், ஒரு கியர் சைக்கிள் ஆகியவற்றை குட்டி யானை மூலம் திருடி சென்ற 3 காவலர்கள் தொடர்பான சிசிடிவி காட்சிகள் நேற்று வெளியானது.

The post இருசக்கர வாகனங்கள் திருட்டு: 3 போலீசார் பணியிடை நீக்கம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Virugampakkam ,station ,Jagan ,Sathya Prabhu ,Mani ,Dinakaran ,
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!