×

உத்தரப்பிரதேசத்தில், பேருந்து தீ பிடித்து எரிந்ததில் 5 பேர் உயிரிழப்பு; 10 பேர் காயம்..!!

உத்திரப்பிரதேசம்: உத்திரப்பிரதேச காசிப்பூரில் பயணிகளுடன் சென்ற பேருந்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்து முழுவதும் தீ பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு; 10 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.  உத்திரபிரதேச மாநிலம் காசிப்பூர் பகுதியில், திருமண நிகழ்வுக்கு சென்றபோது, பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில், பேருந்துக்குள் இருந்த பயணிகள் 20க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த நிலையில், 5க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதால், பேருந்து தீ பிடித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post உத்தரப்பிரதேசத்தில், பேருந்து தீ பிடித்து எரிந்ததில் 5 பேர் உயிரிழப்பு; 10 பேர் காயம்..!! appeared first on Dinakaran.

Tags : UTTAR PRADESH ,Ghazipur, Uttar Pradesh ,Ghazipur ,
× RELATED பிரபல கல்வி நிறுவனங்களின் நுழைவுத்...