×

ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிட அதிகாரம் இல்லை: ஐகோர்ட் கிளை

மதுரை: ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உத்தரவிடும் அதிகாரம் மாவட்ட ஆட்சியர்களுக்கு இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. விருதுநகர்: வத்திராயிருப்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உத்தரவிடக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தரப்படுகிறது என அரசு தரப்பு விளக்கம் அளித்தது. அரசாணையில் குறிப்பிடாத இடங்களில் மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி தர மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட முடியாது எனக்கூறி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

The post ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிட அதிகாரம் இல்லை: ஐகோர்ட் கிளை appeared first on Dinakaran.

Tags : Jallikatu ,Icourt Branch ,Madurai ,Supreme Court ,Virudhunagar ,Icourt Madurai branch ,Vathirairp ,Dinakaran ,
× RELATED அதிக புகை கக்கும் வாகனங்களுக்கு...