×

திண்டிவனம் அருகே தண்ணீர் எடுக்க சென்ற இளைஞர் கிணற்றில் சடலமாக மீட்பு

*கொலையா? போலீசார் விசாரணை

திண்டிவனம் : விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடுபேட்டை அருகில் உள்ள பள்ளிக்குளம் கிராமத்தை சேர்ந்த ஆதிமூலம் மகன் மதுரைவீரன் (19). மாற்றுத்திறனாளியான இவர் நேற்று முன்தினம் மதியம் 3 மணியளவில் தணியல் கிராம எல்லைக்குட்பட்ட நாகமணியின் மகன் சுகுமார் என்பவரின் விவசாய கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்றதாக கூறப்படுகிறது. தண்ணீர் எடுக்க சென்றவர் வெகு நேரமாகியும் வராததால் சந்தேமடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அவரது சகோதரர் மணிகண்டன் கிணற்றில் இறங்கி தேடியும் கிடைக்காததால் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் இருந்து மதுரைவீரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாற்றுத்திறனாளியான மதுரைவீரன் ஏன் கிணற்றுக்கு தண்ணீர் எடுக்க சென்றார், இது தற்செயலாக நடந்த விபத்தா அல்லது கொலையா என்ற கோணங்களில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்ற மாற்றுத்திறனாளி இளைஞர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post திண்டிவனம் அருகே தண்ணீர் எடுக்க சென்ற இளைஞர் கிணற்றில் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : Tindivanam ,Maduraiveeran ,Adimoolam ,Pallikkulam village ,Vellimedupet ,Villupuram district ,Nagamani ,Thanial ,
× RELATED அனுமதியின்றி இ-சேவை மையம்: போலி ஆவணங்கள் தயாரித்தவர் கைது