×

மரவள்ளி கிழங்கு சாப்பிட்ட சிறுமி சாவு

சிவகங்கை : சிவகங்கை அருகே மரவள்ளிக் கிழங்கு சாப்பிட்ட 13வயது பள்ளி மாணவி உயிரிழந்தார்.சிவகங்கை அருகே தமறாக்கி கிராமத்தைச் சேர்ந்தவர் வன்னிமுத்து, முத்தம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு சுவேதா(13), வனிதா(10) மற்றும் மற்றொரு குழந்தை உள்பட மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். தமறாக்கி அரசு பள்ளியில் சுவேதா 7ம் வகுப்பும், வனிதா 4ம் வகுப்பும் படித்து வருகின்றனர். வன்னிமுத்து விறகு வெட்டும் வேலை செய்து வருகிறார். அவரது மனைவி முத்தம்மாள் தினக் கூலி வேலைக்கு சென்று வருகிறார்.

இவர், மரவள்ளிக் கிழங்கு அறுவடை வேலைக்கு சென்று விட்டு வரும் போது மரவள்ளி கிழங்கு வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார். கிழங்கை சிப்ஸ் செய்து குழந்தைகளுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை சாப்பிட்ட சுவேதா மற்றும் வனிதா ஆகிய இருவருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதில் சுவேதா உடல் நிலை மோசமாகி வீட்டிலேயே உயிரிழந்தார். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வனிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மரவள்ளி கிழங்கு சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த சம்பவம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சிவகங்கை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post மரவள்ளி கிழங்கு சாப்பிட்ட சிறுமி சாவு appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Vannimuthu ,Muthammal ,Thamaraki ,Swetha ,Vanitha ,Tamaraki ,
× RELATED கோடைகால பயிற்சி முகாம் இன்று துவக்கம்