×

புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி 971 காளைகள் ஆக்ரோஷ பாய்ச்சல்

 

புதுக்கோட்டை, மார்ச் 11: புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 971 காளைகள் ஆக்ரோசமாக பாய்ந்ததில் 19 பேர் படுகாயம் அடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அருகே அருகே உள்ள செங்களாக்குடி ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. ஜல்லிக்கட்டை டிஆர்ஓ செல்வி தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதனை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. இதனைதொடர்ந்து மற்ற காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் உள்பட பல மாவட்டங்களில் இருந்து காளைகளை அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்திருந்தனர். மொத்தம் 754 காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் 200 பேர் களம் கண்டனர். ஜல்லிக்கட்டை காண சுற்றியுள்ள கிராமத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் பார்வையாளர்கள் அதிகம் பேர் வந்திருந்தனர். காளைகளை அடக்கியதில் மாடு பிடி வீரர்கள் 12 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு அங்கேயே சிகிச்சை அளிக்க வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் 3 பேர் மேல் சிகிச்சைக்காக திருச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜல்லிகட்டுல் 150 க்கும் மேற்பட்ட போலீஸ்சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி 971 காளைகள் ஆக்ரோஷ பாய்ச்சல் appeared first on Dinakaran.

Tags : Jallikattu ,Pudukottai ,971 bulls ,bulls ,Pudukottai district ,Senlagakudi ,Mathur ,Jallikattu Competition ,Dinakaran ,
× RELATED விராலிமலையில் இன்று நடக்கிறது: போட்டி நடத்த ஜல்லிக்கட்டு களம் தயார்