×

அனுமதியின்றி வைத்ததாக அக்னி கலசம் அகற்றம் பாமக மாவட்ட செயலாளர் உட்பட 15 பேர் கைது கலசபாக்கம் அருகே போலீஸ் குவிப்பு

 

கலசபாக்கம், மார்ச் 11: கலசபாக்கம் அருகே நள்ளிரவு அனுமதியின்றி வைக்கப்பட்ட அக்னி கலசத்தை போலீசார் அகற்றினர். இதுதொடர்பாக பாமக மாவட்ட செயலாளர் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த நாயுடு மங்கலம் கூட்ரோட்டில் கடந்த 1989ம் ஆண்டு வன்னியர் சங்கம் சார்பில் நிறுவப்பட்ட அக்னி கலசத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் திறந்து வைத்தார். இதையடுத்து கடந்த 2021ம் ஆண்டு சாலை அகலப்படுத்த அக்னி கலசம் அகற்றப்பட்டது. இதை கண்டித்து கட்சியின் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றது. அப்போது அக்னி கலசத்தை மீண்டும் நிறுவ அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். அகற்றப்பட்ட அக்னி கலசம் அப்போது கலசபாக்கம் தாலுக்கா அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

The post அனுமதியின்றி வைத்ததாக அக்னி கலசம் அகற்றம் பாமக மாவட்ட செயலாளர் உட்பட 15 பேர் கைது கலசபாக்கம் அருகே போலீஸ் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : Pamaga ,Kalasapakkam ,Agni ,Kalasam ,Bamaga ,Thiruvannamalai district ,Naidu Mangalam Koodrod ,
× RELATED அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு...