×

திண்டுக்கல்லில் தமிழ்நாடு அரசு அலுவலக ஒன்றியத்தின் முப்பெரும் விழா

 

திண்டுக்கல், மார்ச் 11: தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் முப்பெரும் விழா திண்டுக்கல் மாவட்டம் நொச்சி ஓடைப்பட்டி உள்ள லைப் சென்டரில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில நிர்வாகிகள் கூட்டம், மாநில பொதுக் குழு கூட்டம் மற்றும் தேர்தல் பேரவை கூட்டம் என முப்பெரும் விழா நடைபெற்றது. மாநில தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார்.

மாவட்ட தலைவர் பார்த்தசாரதி, மாநில செயலாளர் பாபா கார்த்தி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் புதிய தலைவராக தண்டபாணி, துணைத் தலைவராக சிவக்குமார், பொருளாளராக சங்கர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விழாவில் தமிழ்நாடு அரசு ஒன்றியத்தின் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், மத்திய செயற்குழு உறுப்பினர்கள் இணைப்புச் சங்க தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண் டனர். மாவட்ட பொருளாளர் பொன். இளங்கோ நன்றி கூறினார்.

The post திண்டுக்கல்லில் தமிழ்நாடு அரசு அலுவலக ஒன்றியத்தின் முப்பெரும் விழா appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Government Office Union Triennial ,Dindigul ,Tamil Nadu Government Servants Union ,Life Centre ,Nochi Odaipatti, Dindigul district ,Tamil Nadu Government Officers Union State Administrators Meeting ,State General Committee Meeting ,Government Office Union Triennial in ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...