×

கேளம்பாக்கம் அருகே பரபரப்பு தனியார் தங்கும் விடுதியில் தீ விபத்து: 40 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

 

திருப்போரூர், மார்ச் 11: கேளம்பாக்கம் அருகே தனியார் தங்கும் விடுதியில், வெல்டிங் செய்யும் ஏற்பட்ட தீவிபத்தில் 40 பேர் உயிர் தப்பினர். கேளம்பாக்கம் அடுத்த நாவலூர் அருகே கழிப்பட்டூரில் சுமார் 40 அறைகள் கொண்ட தனியார் தங்கும் விடுதி உள்ளது. இங்கு, மென்பொருள் பணியாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் என 80க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர். மாத வாடகை அடிப்படையில் இவர்கள் இங்கு தங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

மூன்று மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்திற்கு லிப்ட் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதற்காக நேற்று முன்தினம் இரவு மூன்றாவது மாடியில் இரும்பு ராடுகளை இணைப்பதற்காக வெல்டிங் செய்யும் பணி நடைபெற்றது. அதில் இருந்து தீப்பொறிகள் கீழே விழுந்தன. கட்டிடத்தின் தரை தளத்தில் சுமார் 14 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. வெல்டிங் செய்யும்போது கீழே விழுந்த தீப்பொறிகள் மோட்டார் சைக்கிள் மீது பட்டு தீப்பிடித்தது.

இந்த தீ மளமளவென பரவி மாடிப்படி மற்றும் லிப்ட் பாதை வழியாக முதல் மாடியில் இருந்து மூன்றாவது மாடி வரை பரவியது.  மூன்று மாடிகளில் தங்கி இருந்த மென்பொருள் பொறியாளர்கள் சுமார் 40 பேர் தங்களது அறைகளை விட்டு வெளியே வந்தனர். அவர்கள், இந்த விடுதிக்கு அருகே மற்றொரு கட்டடத்தின் கட்டுமான பணி நடைபெற்று வந்தது. தீப்பிடித்த கட்டிடத்தில் இருந்து வெளியே வந்த அனைவரும் புதிய கட்டுமான பணி நடைபெறும் கட்டிடத்தின் வழியாக கீழே இறங்கி உயிர் தப்பினர்.

இந் தீ விபத்து குறித்து சிறுசேரி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் செந்தில்குமரன் தலைமையில் சிறுசேரி தீயணைப்பு படையினர் வந்து சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதிகாலை 4 மணிக்கு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் கட்டிடத்தின் தரைதளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 14 மோட்டார் சைக்கிள் முற்றிலுமாக எரிந்து கருகின. இதில் யாருக்கும் காயமோ உயிர் சேதமோ ஏற்படவில்லை. இந்த தீவிபத்து குறித்து கேளம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தங்கு விடுதி படூரை சேர்ந்த வெங்கட்குமார் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது.

The post கேளம்பாக்கம் அருகே பரபரப்பு தனியார் தங்கும் விடுதியில் தீ விபத்து: 40 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் appeared first on Dinakaran.

Tags : Kelambakkam ,Tirupporur ,Akhipattur ,Navalur ,Kelambakkam.… ,Dinakaran ,
× RELATED பெண்கள் போற்றப்படும் இடங்களில் எல்லாம் வெற்றிதான்!