×

திருச்சி ரயில்வே கோட்டத்தில் 2 குட்ஷெட் யார்டு: காணொளி மூலம் நாளை பிரதமர் துவக்கி வைக்கிறார்

 

 

திருச்சி, மார்ச் 11: திருச்சி ரயில்வே கோட்டத்தில் ரூ. 14 கோடி மதிப்பில் 2 குட்ஷெட் யார்டை பிரதமர் மோடி நாளை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி நாளை (செவ்வாய்க்கிழமை) ரயில்வே உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு கடைகள் மற்றும் புதிய குட்ஷெட் யார்டுகள் போன்ற ரூ. 85 ஆயிரம் கோடி மதிப்பிலான பல ரயில்வே உள்கட்டமைப்பு திட்டங்களை காணொளி காட்சி மூலம் நாளை (12ம் தேதி) தொடங்கி வைக்கிறார். இதில் திருச்சி ரயில்வே கோட்டத்தில் உள்ள 44 ரயில் நிலையங்களில் 60 ஒரு நிலையம் ஒரு தயாரிப்புக் கடைகள், பட்டுக்கோட்டை மற்றும் திருத்துறைப்பூண்டியில் தலா ரூ. .7 கோடி மதிப்பில் 2 குட்ஷெட் யார்டுகள் மற்றும் திருச்சி ரயில்வே ஜங்சன் பகுதியில் உள்ள மருந்தகமும் அடங்கும்.

பட்டுக்கோட்டையில் உணவு தானியங்கள் (அரிசி மற்றும் நெல்) ஏற்றுதல் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. இதுவரை 28.5 ரேக்குகள் ஏற்றப்பட்டுள்ளன. மற்றும் திருத்துறைப்பூண்டி குட்ஷெட் யார்டில் உணவு தானியங்கள் ஏற்றுதல் கடந்த வருடம் நவம்பர் மாதம் தொடங்கி இதுவரை 18 ரேக்குகள் ஏற்றப்பட்டுள்ளன. திருச்சியில் இருந்து பெங்களூரு மற்றும் சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்க கேட்டுள்ளோம், மேலும் கூடுதலாக 33 ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு கடைகள் அமைக்க இடம் தேர்வு நடைபெற்று வருகிறது. மேலும் மைசூர் – சென்னை விரைவு ரயில் கடலூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மற்றும் கூடுதலாக 2 டெமு ரயில்கள் கேட்டுள்ளோம் என்றார்.ரயில்வே கோட்ட வணிக மேலாளர் செந்தில்குமார், திருச்சி கோட்ட தொலைத்தொடர்பு என்ஜினீயர் இரப்பாபிருக்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

The post திருச்சி ரயில்வே கோட்டத்தில் 2 குட்ஷெட் யார்டு: காணொளி மூலம் நாளை பிரதமர் துவக்கி வைக்கிறார் appeared first on Dinakaran.

Tags : 2 ,Goodshed ,Yard ,Trichy Railway Division ,Trichy ,Trichy Railway Sector ,Modi ,Yards ,Narendra Modi ,Gutshed Yards ,PM ,Dinakaran ,
× RELATED முட்டை மக்ரோனி