- மகளிர் தினம்
- திருவாரூர்
- சர்வதேச மகளிர் தினம்
- திருவாரூர் பழைய பேருந்து நிலையம்
- திருவாரூர் மாவட்ட கூட்டுறவு
- சித்ரா
- வலயக்
திருவாரூர், மார்ச் 11: திருவாரூர் மாவட்ட கூட்டுறவுத்துறை ஊழியர்கள் சார்பில் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே சர்வதேச மகளிர் தினம் திருவாரூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் சித்ரா தலைமையில் கொண்டாடப்பட்டது.இதில் கலந்து கொண்ட கூட்டுறவுத்துறை பெண் ஊழியர்கள், ஒரே மாதிரியான புடவை அணிந்து கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஊழியர்கள் ஒவ்வொருவரும் தங்களை சுய அறிமுகம் செய்து கொண்டனர். தொடர்ந்து மகளிர் தினத்தின் பெருமைகளையும், ஒரு பெண்ணாக தான் எவ்வாறு இந்த துறையை தேர்ந்தெடுத்து அதில் திறம்பட பணிபுரிந்து வருகிறேன் என்பது குறித்தும் மண்டல இணை பதிவாளர் சித்ரா, கூட்டுறவு துறை பெண் ஊழியர்களுக்கு எடுத்துரைத்தார். இதேபோல ஊழியர்களும் தங்களது பணி அனுபவங்களை மேடையில் பகிர்ந்து கொண்டனர்.தொடர்ந்து அனைவரும் சேர்ந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது கூட்டுறவுத் துறை பெண் ஊழியர்கள், மண்டல இணைப் பதிவாளரை உற்சாகப்படுத்தினர்.
The post கூட்டுறவுத்துறை ஊழியர்கள் சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம் கோலாகலம் appeared first on Dinakaran.