×

குடவாசலில் ரூ.1.20 லட்சம் புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது

 

திருவாரூர், மார்ச் 11: குடவாசலில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பாக்கெட்டுகளை கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.திருவாரூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. அதைத்தொடர்ந்து எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் குடவாசல் பகுதியில் தனிப்பிரிவு ஏட்டு பிரபாகரன் தலைமையில் போலீசார் விஜயகுமார், குருசீலன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த கும்பகோணம் மேலக்காவேரி அமேத்திபுர தெருவை சேர்ந்த பெருமாள் மகன் குமார்(எ)சிவக்குமார்(54), குடவாசல் திருவிடைசேரியை சேர்ந்த சந்தானம் மகன் ராஜ்குமார் (40) ஆகியோரிடம் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட்டுகள் இருந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 6 ஆயிரம் புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

The post குடவாசலில் ரூ.1.20 லட்சம் புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Gudavasal ,Tiruvarur ,Kudavasal ,Tiruvarur district ,Dinakaran ,
× RELATED பள்ளிகள் திறப்பதற்கு முன்ேப வரும்...