×

தஞ்சாவூரில் இன்று தொழிற் பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம்

 

தஞ்சாவூர், மார்ச் 11: தேசிய தொழிற் பழகுநர் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின்கீழ் தொழிற் பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் தஞ்சாவூரில் இன்று நடைபெறுகிறது.இதுகுறித்து கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தஞ்சாவூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்று (11ம் தேதி) காலை 9 மணியளவில் இம்முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம். ஆவின் உள்ளிட்ட அரசு பொதுத்துறை நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முன்னனி நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழிற்பழகுநர் பயிற்சிக்கு ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பி.இ. பயிற்சி பெற்றவர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

மேலும் 8. 10 மற்றும் 12ம் வகுப்பு கல்வித்தகுதி உடையவர்களை நேரடியாக தொழிற்சாலைகளில் அப்ரென்டிஸ் ஆக சேர்த்து 3 முதல் 6 மாத கால அடிப்படைப் பயிற்சியும், ஓராண்டு முதல் ஈராண்டுகள் வரை தொழிற் பழகுநர் பயிற்சியும் பெற்று, தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் பெறலாம். இத்தொழிற்பழகுநர் பயிற்சிக்கு உதவித்தொகை ரூ.5000, முதல் ரூ.9000 வரை நிறுவனத்தால் வழங்கப்படும். இச்சான்றிதல் பெறுவதன் மூலமாக அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பில் முன்னுரிமை, இந்திய அளவிலும், பயனுள்ளதாக அமையும். அயல்நாடுகளில் பணியாற்றலாம். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார். மேலும் தகவல்களுக்கு உதவி இயக்குநர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், தஞ்சாவூர் என்ற முகவரியிலோ அல்லது 04362-278222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 

The post தஞ்சாவூரில் இன்று தொழிற் பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் appeared first on Dinakaran.

Tags : Vocational ,Training ,Enrollment Camp ,Thanjavur ,Vocational Training Enrollment Camp ,Deepak Jacob ,Dinakaran ,
× RELATED பெரம்பலூரில் செயல்படும் லால்குடி...