அம்பத்தூர்: அம்பத்தூரில் மெத்தபெட்டமைன் என்ற போதை பொருள் விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து ₹20 லட்சம் மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. சென்னை அம்பத்தூர் பானுநகர் பகுதியில், அம்பத்தூர் உதவி ஆய்வாளர் வேலையா பாண்டியன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த காரை சோதனை செய்தபோது, கார் டிக்கியில் 200 கிராம் மெத்தபெட்டமைன் என்ற போதை பொருள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அம்பத்தூர் பகுதியை சேர்ந்த பாபு மற்றும் ரமேஷ் என்பதும், பெங்களூருரில் இருந்து கடத்தி வந்து சிறுசிறு பொட்டலங்களாக பிரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மெத்தபெட்டமைனின் மதிப்பு ₹20 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதையடுத்து காரும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இரு வரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அம்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post ரூ.20 லட்சம் மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்: இருவர் கைது appeared first on Dinakaran.