×

தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் அடுத்த 7 நாட்களில் வறண்ட வானிலையே நிலவக்கூடும்: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று(10.03.2024) முதல் 16ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “இன்று(10.03.2024) முதல் 16ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை: 10.03.2024 முதல் 12.03.2024 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் அடுத்த 7 நாட்களில் வறண்ட வானிலையே நிலவக்கூடும்: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Puduwai ,Karaikal ,Chennai ,Puduwa ,Meteorological Centre ,
× RELATED தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு...