×

மோடி பிரதமரான பிறகு பாலியல் வன்முறைகள், குற்றங்கள் அதிகரிப்பு: மகிளா காங். தலைவி குற்றச்சாட்டு

ஈரோடு மாவட்டம் கோபியில் தமிழக மகிளா காங்கிரஸ் மாநில தலைவர் சுதா ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும், பாலியல் வன்முறைகளும் 2014ம் ஆண்டு மோடி பிரதமராக பதவியேற்ற பின்பு அதிகரித்து வருகிறது. 2022 தேசிய குற்ற ஆவண அறிக்கையின்படி நாட்டில் 4 லட்சத்து 45 ஆயிரம் பாலியல், கொலை வழக்குகள், கூட்டு பாலியல் வன்கொடுமைகள் என பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால், பெண்கள் இந்தியாவில் பாதுகாப்பாக இருப்பதாக பிரதமர் அப்பட்டமான பொய் கூறி வருகிறார்.

புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை இந்தியாவிற்கான தலைக்குனிவாக பார்க்கிறோம். பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நாடாக இந்தியா மாறி இருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 1 மணி நேரத்திற்கு 51 வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பாஜவை சேர்ந்த எம்எல்ஏக்களும், எம்பிக்களும் இருப்பது தான் அவமானம். இவ்வாறு அவர் கூறினார்.

The post மோடி பிரதமரான பிறகு பாலியல் வன்முறைகள், குற்றங்கள் அதிகரிப்பு: மகிளா காங். தலைவி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Modi ,PM ,Mahila Congress ,Tamil Nadu ,president ,Sudha Ramakrishnan ,Gopi, Erode district ,
× RELATED காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து...