×

கதவு, ஜன்னல் திறந்திருந்தும் வெறும் காற்றுதான் வருது… பாஜவுல சேர ஆள் வரல… பங்கம் செய்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அமைச்சர் டிஆர்பி ராஜா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பாஜ அணியில் கதவு, ஜன்னல் என அனைத்தும் திறந்து இருந்தாலும் உள்ளே செல்ல யாரும் தயாராக இல்லை. வெறும் காற்று மட்டுமே வருகிறது. இவிஎம் இயந்திரங்களை தவிர்த்து வாக்குச்சீட்டு மூலம் மட்டுமே தேர்தல் நடத்த வேண்டும் என்பதே பல்வேறு கட்சிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பாஜ தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள் பிறரின் கவனத்தை ஈர்க்க சாலையில் விளையாடும் சிறுவர்கள் செய்யும் செயலை போல் உள்ளது. அதனை நாம் கண்டு கொள்ளாமல் கடந்து செல்ல வேண்டும். நாம் திராவிட மாடலில் தமிழகத்திற்கான வளர்ச்சி, ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சி மற்றும் உலக அளவிலான வளர்ச்சி குறித்து சிந்தித்து செயலாற்றி கொண்டிருக்கும் வேளையில் அண்ணாமலையின் அர்த்தமற்ற உளறல்களை ஒரு பொருட்டாகவே நினைக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post கதவு, ஜன்னல் திறந்திருந்தும் வெறும் காற்றுதான் வருது… பாஜவுல சேர ஆள் வரல… பங்கம் செய்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா appeared first on Dinakaran.

Tags : Minister ,D. R. P. Raja ,TRP Raja ,Mannargudi, Tiruvarur district ,BJP ,Bajau ,D.R.P.Raja ,
× RELATED GST குறித்து கேள்வி எழுப்பிய பெண்ணை தகாத...