×

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் மகளிர் தின விழா

*கூடுதல் கலெக்டர் பங்கேற்பு

தூத்துக்குடி : மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் மகளிர் தினத்தன்று கூடுதல் கலெக்டர் ஐஸ்வர்யா தலைமையில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் பெண் ஊழியர்களுடன் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஐஸ்வர்யா கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். பின்னர் அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

தொடர்ந்து மகளிர் ஊழியர்கள் பங்கேற்ற புகையில்லா சமையல், மியூசிக்கல் சேர், பாடல் மற்றும் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு கூடுதல் கலெக்டர் ஐஸ்வர்யா பரிசு வழங்கி பாராட்டினார்.இதில், உதவி திட்ட அலுவலர்கள் மோகன், நாராயணன், கணக்கு அலுவலர் ஏஞ்சல் மாலிகா, கண்காணிப்பாளர் ஹெலன் பொன்மணி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் மகளிர் தின விழா appeared first on Dinakaran.

Tags : Women's Day ,District ,Rural Development ,Agency ,Aishwarya ,District Rural ,Development ,International Women's Day ,District Rural Development Agency ,Office ,Dinakaran ,
× RELATED கடும் வெப்ப அலைவீச்சிலிருந்து தூய்மை பணியாளர்களை பாதுகாக்க வேண்டும்