×

திருச்சியில் வெவ்வேறு பகுதியில் 2 இளம்பெண்கள் மாயம்

 

திருச்சி, மார்ச் 9: திருச்சியில் வெவ்வேறு பகுதிகளில் மாயமான 2 பெண்களை போலீசார் தேடுகின்றனர். திருச்சி ராம்ஜிநகர் மில் காலனியை சேர்ந்த இந்திரா மகள் ஷாலினி (25). இவர், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

சில தினங்களுக்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் மகளை அழைத்துச்சென்று நிறுவனத்தில் இந்திரா விட்டு விட்டு வந்தார். நேற்றுமுன்தினம் சென்று பார்த்தபோது நிறுவனத்தில் ஷாலினி இல்லை. இதுகுறித்து விசாரித்தபோது அவர் மாயமானது தெரியவந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கன்டோன்மென்ட் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல், திருச்சி பாலக்கரை கீழப்புதூரை சேர்ந்தவர் சுபாஷினி(19) என்பவர் தனியார் கல்லூரியில் பிகாம் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 3ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. இதுகுறித்து பாலக்கரை போலீசார் வழக்குப்பதிந்து சுபாஷனியை தேடி வருகின்றனர்.

The post திருச்சியில் வெவ்வேறு பகுதியில் 2 இளம்பெண்கள் மாயம் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Indira ,Shalini ,Ramjinagar Mill Colony ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...