×

விவசாயியிடம் ₹4 லட்சம் பறிப்பு

பொன்னேரி, மார்ச் 9: பொன்னேரி அடுத்த திருப்பாலைவனம் பஜார் பகுதியில் வசித்து வருபவர் ஜெகதீசன்(49). விவசாயி. இவருக்கு சொந்தமான தங்க நகைகளை நேற்றுமுன்தினம் பொன்னேரியில் உள்ள வங்கியில் அடகு வைத்துவிட்டு ₹4 லட்சத்து 10 ஆயிரம் பெற்றுக் கொண்டு தனது பைக்கில் திருஆயர்பாடி பகுதியில் உள்ள சாலையோரக்கடையில் பழங்களை வாங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில், ஜெகதீசனுக்கே தெரியாமல் அவரை பின் தொடர்ந்து பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள், அவர் பைக்கின் பொட்ரோல் டேங் மீது வைத்திருந்த பணப்பையை லாவகமாக எடுத்துக் கொண்டு பைக்கில் வேகமாக சென்றுவிட்டனர். இதை பார்த்த விவசாயி ஜெகதீசன் கூச்சலிட்டு கொந்தளித்து கதறி அழுதுள்ளார். உடனே தனது கைப்பேசி மூலம் 100க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். ஆனால் போலீசார் வந்தபோதும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து விவசாயி ஜெகதீசன் நேற்று பொன்னேரி போலீசில் புகார் செய்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விவசாயியிடம் ₹4 லட்சம் பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Ponneri ,Jagatheesan ,Tirupalaivanam Bazar ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த...