×

ஊத்துக்கோட்டை அருகே பரபரப்பு பதுக்கி வைத்திருந்த செம்மரக்கட்டைகள் பறிமுதல்

ஊத்துக்கோட்டை, மார்ச் 9: ஊத்துக்கோட்டை அருகே கோயில் மற்றும் ஏரிக்கரை பகுதிகளில் மறைத்து வைத்திருந்த செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். ஊத்துக்கோட்டை அருகே ஆலப்பாக்கம் கிராமத்தில் எல்லையம்மன் கோயில் மேற்கூரையிலும், அதன் அருகில் உள்ள ஏரிக்கரை முட்புதரிலும் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக பென்னாலூர்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் நாகராஜிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று முன்தினம் இரவு ஆலப்பாக்கம் பகுதியில் சோதனை செய்தனர். அப்போது கோயில் மேற்கூரையில் 40 செம்மரக்கட்டைகளும், ஏரிக்கரை ஓரத்தில் முட்புதரில் 50 செம்மரக்கட்டைகள் என 90 செம்மரக்கட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கட்டைகள் ₹5 லட்சம் மதிப்புடையது என தெரிந்தது. இதனையடுத்து செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை சீத்தஞ்சேரி வனச்சரக அலுவலரிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த செம்மரக்கட்டைகள் எப்படி வந்தது என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அக்கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

The post ஊத்துக்கோட்டை அருகே பரபரப்பு பதுக்கி வைத்திருந்த செம்மரக்கட்டைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Uthukottai ,Uthukkottai ,Alappakkam village ,Behanayamman temple ,
× RELATED அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அரசு...