×

பெண் மர்மச்சாவு போலீசார் விசாரணை

திருவண்ணாமலை, மார்ச் 9: திருவண்ணாமலையில் பெண் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை ராமலிங்கனார் தெருவை சேர்ந்தவர் சுதா(40). கூலி தொழிலாளி. இவர், நேற்று இரவு வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து, அவரது உறவினர்கள் கொடுத்த தகவலின் பேரில் திருவண்ணாமலை டவுன் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது சுதாவின் உடலில் காயங்கள் இருந்தன. மேலும், கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார், சுதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து கணவன்- மனைவி தகராறில் சுதா இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெண் மர்மச்சாவு போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Marmacau ,Thiruvannamalai ,Sudha ,Ramalinganar Street, Thiruvannamalai ,
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...