×

சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து உரிமையாளர் சாவு செங்கம் அருகே

செங்கம், மார்ச் 9: செங்கம் அருகே சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்த விபத்தில் அதன் உரிமையாளர் பரிதாபமாக பலியானார். செங்கம் அடுத்த தொரப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி அருள்மகன் ஜெயமூர்த்தி(28). இவர் சொந்தமாக லாரி வைத்துள்ளார். நேற்று நள்ளிரவு 11 மணியளவில் ஜெயமூர்த்தி லாரியை ஓட்டிக்கொண்டு வந்தார். முத்தனூர் சாலையில் உள்ள பாலத்தை கடந்து சென்றபோது திடீரென அவரது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஜெயமூர்த்தி உடல் நசுங்கி சம்பவ இடத்தில் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவலறிந்த புதுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று லாரியை அப்புறப்படுத்தினர். பின்னர், ஜெயமூர்த்தி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து செங்கம் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து உரிமையாளர் சாவு செங்கம் அருகே appeared first on Dinakaran.

Tags : Sengam ,Arulmakan Jayamurthy ,Torapadi ,Lorry ,Dinakaran ,
× RELATED திமுக நிர்வாகி மீது பாமகவினர் தாக்குதல் போலீசார் தடியடி