×

நெல்லை அருகே இளம்பெண் மாயம்

நெல்லை, மார்ச் 9: தாழையூத்து முத்துநகரை சேர்ந்தவர் சாமி(47). இவரது மகள் லட்சுமி(25) எம்பிஏ பட்டதாரியான இவர், கங்கைகொண்டானில் உள்ள நிறுவனத்தில் சூபர்வைசராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் வழக்கம் போல வீட்டில் இருந்து வெளியே சென்ற லட்சுமி, அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சாமி அளித்த புகாரின் பேரில் தாழையூத்து போலீசார் வழக்கு பதிந்து மாயமான லட்சுமியை தேடி வருகின்றனர்.

The post நெல்லை அருகே இளம்பெண் மாயம் appeared first on Dinakaran.

Tags : Nellai ,Sami ,Muthunagar, Thalayuthu ,Lakshmi ,Gangaikondan ,
× RELATED நெல்லையில் அரசு பேருந்து ஓட்டுநர்,...