×

தனியார் டிராவல்ஸ் ஊழியர் தற்கொலை

கேடிசி நகர், மார்ச் 9: தாழையூத்து அருகே கட்டுடையார் குடியிருப்பு, நடுத்தெருவை சேர்ந்த லட்சுமணன் மகன் பிரேம்குமார் (31). தனியார் டிராவல்சில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவியும், மகனும், மகளும் உள்ளனர். குடும்ப பிரச்னை காரணமாக நேற்று முன்தினம் விஷம் குடித்தார். ராமையன்பட்டி சிவாஜிநகரில் உள்ள உறவினர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். இதுகுறித்து மானூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

The post தனியார் டிராவல்ஸ் ஊழியர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : KDC NAGAR ,PREMKUMAR ,LAKSHMANAN ,KATHUDIYAR ,THADHIUTHU ,Andinam ,
× RELATED பாமக மாஜி நிர்வாகி மீது பெட்ரோல் குண்டு வீச்சு