×

பிடிஓ பொறுப்பேற்பு

மல்லசமுத்திரம், மார்ச் 9: மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சி) சுந்தரம் பதவி ஏற்றுக் கொண்டார். இதற்கு முன் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் பணி புரிந்தார். இங்கு பணியாற்றி வந்த லோகமணிகண்டன், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார். நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட சுந்தரத்திற்கு ஊராட்சி தலைவர்கள், துணை தலைவர்கள், செயலாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

The post பிடிஓ பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Tags : PTO ,Mallasamutram ,Sundaram ,District Development Officer ,Village ,Panchayat ,Mallasamutram Panchayat Union ,Puduchattaram Panchayat Union ,Lokamanikandan ,Elachipalayam Panchayat Union Office ,Dinakaran ,
× RELATED விருதுநகர் மாவட்டம்...