×

திண்டுக்கல் அருகே வியாபாரி தற்கொலை

திண்டுக்கல், மார்ச் 9: திண்டுக்கல் அனுமந்தராயன் கோட்டை கிழக்கு தெருவை சேர்ந்தவர் கதிரவன் (36). வியாபாரி. இவரது மனைவி மகாலட்சுமி (26). ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கதிரவன் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மார்ச் 4ம் தேதி வியாபாரத்துக்கு சென்றவர் வீட்டுக்கு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரில் திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கதிரவனை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று கதிரவன் அவரது வீட்டின் அருகேயுள்ள தோட்டத்து மோட்டார் அறையில் பூச்சி மருந்து குடித்து இறந்து கிடந்தார். தகவலறிந்ததும் தாலுகா இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், எஸ்ஐ பாலசுப்ரமணியன், ஏட்டு அருளானந்தம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திண்டுக்கல் அருகே வியாபாரி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Katiravan ,Anumantarayan Fort East Street, Dindigul ,Mahalakshmi ,
× RELATED அப்பப்பா…அனல் காத்து வீசுது...