×

சென்னை அரும்பாக்கத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்டு கைதான காவலர் ஜாமினில் விடுவிப்பு

சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்டு கைதான காவலர் ராஜதுரை ஜாமினில் விடுவித்துள்ளனர். கடந்த பிப்.25-ம் தேதி அரும்பாக்கத்தில் விஜயலட்சுமி என்பவரிடம் காவலர் ராஜதுரை செயினை பறித்துள்ளார். விஜயலட்சுமியிடம் கைவரிசை காட்டி விட்டு தப்பமுயன்ற காவலர் ராஜதுரையை பொதுமக்கள் தாக்கினர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காவலர் ராஜதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சூளைமேடு காவல் நிலையத்தில் 30 நாட்கள் தினமும் ஆஜராகி ராஜதுரை கையெழுத்திடவேண்டும் என்று நீதிபதி உத்தரவு அளித்துள்ளார்.

The post சென்னை அரும்பாக்கத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்டு கைதான காவலர் ஜாமினில் விடுவிப்பு appeared first on Dinakaran.

Tags : Arumbakkam, Chennai ,CHENNAI ,Rajadur ,Arumbakkam ,Rajadurai ,Vijayalakshmi ,Rajathurai ,Dinakaran ,
× RELATED ரதிமீனா டிராவல்ஸ் அலுவலகத்தில் ரெய்டு