×

சென்னையில் மென்பொருள் தயாரிப்பு பணியை தீவிரப்படுத்தும் ஃபோர்டு.. கூடுதலாக 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு!!

சென்னை : சென்னையில் மின்சார வாகன மென்பொருள் தயாரிப்பு பணிகளை விரிவாக்கம் செய்ய ஃபோர்டு நிறுவனம் திட்டமிட்டுள்ள நிலையில், இதன் மூலம் 3000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் உள்ள ஃபோர்டு பிசினஸ் சலுயூஷன்ஸ் நிறுவனத்தில் மின்சார வாகனங்களுக்கான மென்பொருள் தயாரிப்பை விரிவாக்கம் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மின்சார வாகனங்களுக்கு தேவையான மென்பொருட்கள், உற்பத்திக்கான மென்பொருட்களை சென்னையில் உள்ள நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக காக்பிட்டுக்கான தொழில்நுட்பம் மற்றும் இசை, வீடியோ உள்ளிட்டவைக்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் பணியும் இங்கு நடைபெற உள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மென்பொருளை மேம்படுத்தும் பணியும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னையில் உள்ள ஃபோர்டு நிறுவனத்தின் 12,000 பேர் பணியாற்றி வருகின்றனர். அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் கூடுதலாக 3,000 பேர் பணியில் சேர்க்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னையில் மென்பொருள் தயாரிப்பு பணியை தீவிரப்படுத்தும் ஃபோர்டு.. கூடுதலாக 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு!! appeared first on Dinakaran.

Tags : Ford ,Chennai ,Ford Business Solutions ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...