×

அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் கடனுதவி: தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் கடனுதவி; தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களை தொழிலதிபர்களாக மாற்றுவது குறித்து அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான கடன் உதவிகளை முதலமைச்சர் ஆதிதிராவிட மக்களுக்கு வழங்கி வருகிறார். ஆதிதிராவிட மக்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு துறைகளில் தொழில் முனைவோர்களாக மாற்றும் வகையில் அவர்களின் மொத்த திட்ட தொகையில் 35 சதவீத தொகையானது மானியமாக வழங்கப்படுகிறது.

அதன் படி இன்றைய தினம் தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கழிவு நீர் அகற்றும் ஊர்திக்காக மானியத்துடன் கூடிய கடனுதவி திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு கடலுதவிக்கான ஆணையை வழங்கினார். இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 213 பேருக்கு ரூ.61 கோடி மானியத்துடன் ரூ.129 கோடி மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது .

 

The post அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் கடனுதவி: தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : AMBEDGARH INDUSTRY ,AMBEDKAR INDUSTRY PIONEERS ,K. Stalin ,Chennai ,Chief Minister ,MLA K. ,Stalin ,Tamil Nadu ,MLA ,Ambedkar ,Aadiravidar ,K. ,Industry ,Dinakaran ,
× RELATED தொழிலாளர்கள் குடும்பங்கள் கல்வி,...