×

நாகப்பட்டினம் நகராட்சி எல்லையில் குப்பைகள் தேங்காமலிருக்க கட்டுப்பாட்டு அறை திமுக பற்றி அவதூறு பதிவு நாம் தமிழர் நிர்வாகி மீது வழக்கு

மயிலாடுதுறை, மார்ச் 8: மயிலாடுதுறை மாவட்ட திமுக மகளிர் அணி வலைதள பொறுப்பாளர் மகாலட்சுமி (43) மயிலாடுதுறை போலீசில் புகார் ஒன்ற கொடுத்துள்ளார். அதில், முகநூல், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் திமுகவை பற்றி அவதூறாகவும், கொச்சைப்படுத்தும் வகையிலும் பதிவிட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழன் காளிதாஸ் என்கிற காளிதாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இன்ஸ்பெக்டர் அழகேசன் மற்றும் போலீசார், நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் காளிதாஸ் மீது இந்திய தண்டனை சட்டம் 509, 500 மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் 67 (எ) ஆகியவற்றின் கீழ்
வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post நாகப்பட்டினம் நகராட்சி எல்லையில் குப்பைகள் தேங்காமலிருக்க கட்டுப்பாட்டு அறை திமுக பற்றி அவதூறு பதிவு நாம் தமிழர் நிர்வாகி மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Naam Tamil ,DMK ,Nagapattinam ,Mayiladuthurai ,Mayiladuthurai district ,Mahalakshmi ,Facebook ,WhatsApp ,
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...