×

காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

சென்னை: தேர்தல் பத்திரங்கள் ஊழலை மறைக்க பாஜவுக்கு உதவும் பாரத ஸ்டேட் வங்கியை கண்டித்து சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நுங்கம்பாக்கம் எஸ்பிஐ வங்கி தலைமை அலுவலகம் முன் நேற்று நடந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை வகித்தார். மேலிட பொறுப்பாளர் வல்ல பிரசாத், முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, திருநாவுக்கரசர், சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் முன்னிலை வகித்தனர்.

மாநில துணை தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், விஷ்ணு பிரசாத் எம்பி, ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ, பொதுச் செயலாளர்கள் தளபதி பாஸ்கர், வக்கீல் செல்வம், அருள் பெத்தையா, பி.வி.தமிழ்செல்வன், இளைஞரணி தலைவர் லெனின் பிரசாத், முதன்மை செயலாளர் அஸ்வத்தாமன், இலக்கிய அணி தலைவர் புத்தன், சென்னை மாநகராட்சி குழு தலைவர் எம்.எஸ்.திரவியம், மாவட்ட தலைவர்கள் சிவ ராஜசேகரன், முத்தழகன், டில்லிபாபு, ரஞ்சன் குமார் மற்றும் சுமதி அன்பரசு, மயிலை தரணி, சூளை ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுபோல, தமிழகம் முழுவதும் எஸ்.பி.ஐ. வங்கியை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

The post காங்கிரசார் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Congress ,CHENNAI ,SBI Bank ,Nungambakkam ,Chennai District Congress Committees ,State Bank of India ,BJP ,Tamil Nadu ,Selvaperunthagai ,
× RELATED விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர்...