×

தொழிலாளியை கொன்று தப்பிய ரவுடி சுட்டுப்பிடிப்பு

வீரவநல்லூர்: நெல்லை மாவட்டம், வீரவநல்லூரை அடுத்த தென்திருப்புவனம் கிராமத்தை சேர்ந்த காளி மகன் பேச்சிதுரை (23). இவர் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் நேற்று மதுபோதையில் தனது நண்பர் சந்துரு (23) என்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதை தொழிலாளி கருப்பசாமி (42) என்பவர் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பேச்சிதுரையும், சந்துருவும் சேர்ந்து கருப்பசாமியை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இதனை தடுக்க வந்த மூலச்சி கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் (26) என்பவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு இருவரும் அங்கிருந்து பைக்கில் தப்பியுள்ளனர். அப்போது அரசு பஸ்சை வழிமறித்து கண்ணாடியை உடைத்தனர்.

தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதியில் இருவரையும் போலீஸ் மடக்கி பிடிக்க முயன்றபோது, இருவரும் காவலர் செந்தில்குமாரையும் கையில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி வாழை தோட்டத்தில் பதுங்கினர். அவர்களை போலீசார் சுற்றிவளைத்ததும், இருவரும் தப்பியோட முயன்றனர். இதை தொடர்ந்து போலீசார் பேச்சித்துரையை துப்பாக்கியால் காலில் சுட்டு பிடித்தனர். சந்துரு அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பேச்சித்துரையை மீட்ட போலீசார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பேச்சித்துரைக்கு காலில் இருந்து துப்பாக்கி குண்டு அகற்றப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

The post தொழிலாளியை கொன்று தப்பிய ரவுடி சுட்டுப்பிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Veeravanallur ,Kali Makan Pachithurai ,Tenthirupuvanam ,Veeravanallur, Nellai district ,Sanduru ,
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி