×

முத்தையாபுரத்தில் தொழிலாளியை மிரட்டிய 2 பேர் கைது

ஸ்பிக்நகர், மார்ச் 8: முத்தையாபுரம் தங்கமணி நகரை சேர்ந்த கணேசன் மகன் இசக்கிமுத்து (37). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இசக்கிமுத்து, அவருடன் வேலை பார்க்கும் திருமுருகன் ஆகியோர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த தங்கம்மாள்புரம் சின்னத்துரை மகன் மகாராஜா(19), இருளாண்டி மகன் கார்த்திகேயன்(19) ஆகியோர் அவர்களிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளனர். இசக்கி முத்து தர மறுக்கவே, அவரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிந்து மகாராஜா, கார்த்திகேயனை கைது செய்தனர்.

The post முத்தையாபுரத்தில் தொழிலாளியை மிரட்டிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Muthiyapuram ,Spignagar ,Ishakhimuthu ,Ganesan ,Thangamani Nagar, ,Isakimuthu ,Thirumurugan ,Thangammalpuram ,Chinnathurai ,Maharaja ,
× RELATED தூத்துக்குடியில் ஹேர்டை குடித்து ஆசிரியை தற்கொலை