×

கார் மெக்கானிக்கை தாக்கி கொலை முயற்சி

தூத்துக்குடி, மார்ச் 8: தூத்துக்குடி தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் ஆதம்அலி தலைமையில் எஸ்ஐ ராஜாமணி மற்றும் போலீசார், நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடற்கரை மொட்டைக் கோபுரம் பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்தவர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள், தாளமுத்துநகர் 3வது தெரு பொன்னுச்சாமி மகன் மல்லையா(36), பூபாலராயபுரம் 2வது தெரு முத்தையா மகன் அந்தோணிகிங்ஸ்டன்(28), ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைசேர்ந்த கணேசன் மகன் ராமதீபன்(27) என்பதும், அப்பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த கார் மெக்கானிக் ஒருவரை வழிமறித்து, பணம் கேட்டு தகராறு செய்து அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து மல்லையா, அந்தோணிகிங்ஸ்டன், ராமதீபன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைதான மல்லையா மீது ஏற்கனவே 14 வழக்குகளும், அந்தோணி கிங்ஸ்டன் மீது 9 வழக்குகளும், ராமதீபன் மீது 9 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post கார் மெக்கானிக்கை தாக்கி கொலை முயற்சி appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Rajamani ,Inspector ,Adam Ali ,Thoothukudi Thalamuthunagar ,Beach Motta Gopuram ,Thalamuthunagar 3rd Street ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி மருத்துவமனையில் ஏ.சி. வார்டு தொடக்கம்..!!