×

2 வயது பெண் குழந்தை குளத்தில் மூழ்கி பலி

பல்லாவரம்: சென்னை மேடவாக்கம், காந்திநகர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பெயர் அபிநயா. இவர்களுக்கு 2 வயதில் தன்ஷிகா என்ற மகள் இருந்தார். இந்நிலையில், நேற்று காலை 10 மணியளவில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தன்ஷிகா திடீரென காணாமல் போனாள். அப்போது வீட்டின் அருகே உள்ள குளத்தில் குழந்தை தன்ஷிகா மயங்கிய நிலையில் கிடந்தாள். இதனைக் கண்டு மேலும் அதிர்ச்சியடைந்த அபிநயா அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் குழந்தையை மீட்டு, சிகிச்சைக்காக மேடவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு, குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பள்ளிக்கரணை போலீசார், குழந்தை தன்ஷிகாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 2 வயது பெண் குழந்தை குளத்தில் மூழ்கி பலி appeared first on Dinakaran.

Tags : Arikrishnan ,Pilliyar Koil Street, Gandhinagar, Medavakkam, Chennai ,Abhinaya ,Tanshika ,
× RELATED தென்னை டானிக் செயல்முறை விளக்கம்