×

செங்கல்பட்டில் ‘நீங்கள் நலமா’ திட்டம்: கலெக்டர், அமைச்சர் ஆய்வு

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் ‘நீங்கள் நலமா’ திட்டம் குறித்து கலெக்டர் மற்றும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் நலத்திட்டங்கள் குறித்த கருத்துகளை பயனாளிகளிடம் கேட்டறியும் ‘நீங்கள் நலமா” என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் ச.அருண்ராஜ் நேற்று பயனாளிகளிடம் நேரடியாகத் தொலைபேசியில் தொடர்புகொண்டு அரசு நலத்திட்டங்கள் குறித்த கருத்துகளை கேட்டறிந்தார்.இதேபோன்று நேற்று‌ குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனும் சிறு தொழில் தொடங்கப்பட்ட பயனாளிகளிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு அரசு நலத்திட்டங்கள் குறித்த கருத்துகளை கேட்டறிந்தார்.

The post செங்கல்பட்டில் ‘நீங்கள் நலமா’ திட்டம்: கலெக்டர், அமைச்சர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Minister ,T. Mo. Anparasan ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!