×

மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் மார்ச் 10-ம் தேதி முதல் நேர்காணல்

சென்னை: மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் மார்ச் 10-ம் தேதி முதல் நேர்காணல் நடைபெற உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் 10-ம் தேதி காலை 9 மணி முதல் திமுக வேட்பாளர் நேர்காணல் நடைபெறுகிறது. விருப்பமனு அளித்துள்ளவர்களிடம் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்துகிறார்.

வெளியான அறிக்கையில்; “நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பி தலைமைக் கழகத்திற்கு விண்ணப்பம் தந்துள்ளவர்களை கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், வருகிற 10-3-2024, ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நேர்காணல் வாயிலாக சந்தித்து தொகுதி நிலவரம் வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து அறிந்திட இருக்கிறார்.

இந்நேர்காணலின்போது, அந்தந்த நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் மட்டுமே இந்நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

வேட்புமனு அளித்தவர்கள், தங்களுக்கான ஆதரவாளர்களையோ – பரிந்துரையாளர்களையோ அழைத்து வரக்கூடாது என்றும், அவர்களையெல்லாம் நேர்காணலுக்கு கண்டிப்பாக அனுமதிக்க இயலாது என்றும் தெரிவிக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் மார்ச் 10-ம் தேதி முதல் நேர்காணல் appeared first on Dinakaran.

Tags : Dimuka ,Lok Sabha elections ,Chennai ,Anna Vidyalaya, Chennai ,
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...