×

பாஜக ஆட்சி அமைந்த பிறகு பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன : செல்வப்பெருந்தகை

சென்னை : மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு, பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மகளிர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், மகளிர், அவர்களின் உரிமைகளை பெறுவதோடு, பொருளாதார ரீதியாகவும் சுயசார்புகளை அடைவதன் மூலமே அவர்களின் வாழ்வு ஏற்றம் பெற முடியும்.

இந்த லட்சியங்களை அடைவதே உலக மகளிர் தின வாழ்த்துச் செய்தியாக இருக்க முடியும். மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு, பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கிற பெண்களுக்கு சமஉரிமை, சமவாய்ப்பு வழங்குவதோடு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை முழுமையாக பெறுகிற வகையில் நல்ல சூழலை உருவாக்க வேண்டுமென்பதே சர்வதேச மகளிர் தினத்தின் நோக்கமாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

The post பாஜக ஆட்சி அமைந்த பிறகு பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன : செல்வப்பெருந்தகை appeared first on Dinakaran.

Tags : BJP ,Selvaperundagai ,Chennai ,Tamil Nadu Congress Committee ,President ,Selvaperunthagai ,Selvaperunthakai ,Women's Day ,
× RELATED பாஜ தேர்தல் அறிக்கை தமாஷ்…செல்வப்பெருந்தகை விமர்சனம்