×

அனைத்து துறைகளிலும் பெண்கள் தங்கள் முத்திரையைபதித்து புதிய சரித்திரம் படைத்திட வேண்டும்: சசிகலா வாழ்த்து

சென்னை: அனைத்து துறைகளிலும் பெண்கள் தங்கள் முத்திரையைபதித்து புதிய சரித்திரம் படைத்திட வேண்டும் என சசிகலா மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். பெண்கள் எதையும் சமாளிக்கும் துணிவுடன் மன உறுதியுடனும் வாழவேண்டும். இன்று பெரும்பாலும் பெண்கள் இல்லாத துறையே இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. காவல்துறை, ராணுவம் விமான மாலுமிகள் தொழில்துறை, அரசியல் என இன்னும் எத்தனையோ துறைகளில் பெண்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர் என்று சசிகலா பெருமிதம் தெரிவித்துள்ளார். பெண்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த மகளிர் தின வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.

The post அனைத்து துறைகளிலும் பெண்கள் தங்கள் முத்திரையைபதித்து புதிய சரித்திரம் படைத்திட வேண்டும்: சசிகலா வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Sasikala ,Chennai ,Women's Day ,
× RELATED புழல் மகளிர் சிறை காவலருக்கு பெண் கைதி கொலை மிரட்டல்..!!