×

காங்கிரஸ், வி.சி.க., மதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு இறுதி செய்வது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!!

சென்னை: காங்கிரஸ், வி.சி.க., மதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு இறுதி செய்வது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி செய்யக்கூடிய நிலையில் உள்ளது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கான அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை எவ்வாறு நடத்தலாம் என்பது தொடர்பான ஆலோசனையை மேற்கொண்டுள்ளார்.

இதில் திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன், தொகுதிப் பங்கீட்டுக் குழுவில் இடம்பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக பொருளாளருமான டி.ஆர். பாலு, அமைச்சர் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், ஆர்.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும் இதுவரை உள்ள கூட்டணிகளில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், சிபிஎம், ஆகிய கட்சிகளுடைய தொகுதி ஒப்பந்தம் கையொப்பம் ஆகியது. இதை தொடர்ந்து மதிமுக, விசிக, காங்கிரஸ் உடனான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை விரைந்து முடித்து தொகுதி பங்கீடுகள் அனைத்திற்குமான இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானதற்கு பின்பாக வேட்பாளர் அறிவிப்புக்கான அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்பது தொடர்பான ஆலோசனையாகவும் பார்க்கப்படுகிறது.

தேர்தல் வரக்கூடிய சூழ்நிலையில் இந்த பணிகள் அனைத்தையும் முடிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலையும் முதலமைச்சர் வழங்கியதாகவும் கூறப்படுகிறது. திமுக தொடர்பாக போட்டியிடுவதற்கான விருப்ப மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளும் இன்றிருக்கக்கூடிய நிலையில் தொடர்ந்து விருப்ப மனுவும் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. ஸ்ரீபெரம்பத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்காக டி.ஆர்.பாலு விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளார். அதே போல் வட சென்னையில் கலாநிதி வீராசாமி விருப்ப மனுவை தாக்கல் செய்தார்.

அதே போல் தமிழச்சி தங்க பாண்டியன் விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளார். தற்போது இருக்கக்கூடியவர்கள் இதே தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. ஆகவே நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில்  நடைபெற்று கொண்டிருக்கக்கூடிய நிலையில், தொகுதிப் பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தை இறுதி செய்வதற்கான ஆலோசனையில் முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் தற்போது அண்ணா அறிவாலயத்தில் மேற்கொண்டுள்ளார்.

The post காங்கிரஸ், வி.சி.க., மதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு இறுதி செய்வது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Tags : Congress ,V. C. ,Minister ,H.E. ,Madimuga ,K. Stalin ,Chennai ,V. ,Chief Minister ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...