×

16 தாசில்தார்கள் மீதான ஒரு மாதம் சிறை தண்டனைக்கு தடை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அம்பத்தூர் முன்னாள், இன்னாள் தாசில்தார்கள் 16 பேருக்கு விதித்த ஒரு மாதம் சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அம்பத்தூரில் உள்ள மோலி அலெக்சாண்டர் என்பவரது நிலத்துக்கு பட்டா வழங்கும்படி 2010-ல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உத்தரவை அமல்படுத்தவில்லை எனக்கூறி 2010 ஆகஸ்ட் 30 முதல் அம்பத்தூர் தாசில்தாராக இருந்த 16 பேருக்கு தனி நீதிபதி சிறை தண்டனை விதித்தார். இந்த வழக்கில் தனி நீதிபதி தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டுமென கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் வாதிட்டார். இதை பதிவு செய்த சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

The post 16 தாசில்தார்கள் மீதான ஒரு மாதம் சிறை தண்டனைக்கு தடை: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Eicourt ,Chennai ,Chennai High Court ,Ambattur ,Inla Dasiltha ,Molly Alexander ,
× RELATED செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்துக்கு...